maniyosai.com

You are here: Home செய்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கட்டுரை: 2 கன்னட நாளிதழ் அலுவலகங்கள் மீது தாக்குதல்

முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கட்டுரை: 2 கன்னட நாளிதழ் அலுவலகங்கள் மீது தாக்குதல்

E-mail Print
Share/Save/Bookmark

tasleemaமங்களூர்: வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நச்ரின் எழுதியதாக சொல்லி, முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்ட 2 கன்னட நாளிதழ்களின் அலுவலகங்கள் சமூக விரோதிகளால் தாக்கப் பட்டுள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு சொந்தமான கன்னட நாளிதழான ‘கன்னட பிரபா'விலும், ‘ஜெய் கிரணா' என்ற மாலை நாளிதழிலும், முஸ்லிம் பெண்கள் அணியும் புனிதமான பர்தா குறித்து ஆட்சேபிக்க தகுந்த கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நச்ரின் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு என பத்திரிகை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய கட்டுரை, முஸ்லிம்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப் பட்டனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்ட 2 பத்திரிகை அலுவலகங்கள் சமூக விரோதிகள் சிலரால் தாக்கப் பட்டுள்ளன.

இன்று மாலை (மார்ச் 2) பத்திரிகை அலுவலகங்களுக்கு வந்த வன்முறை கும்பல், அலுவலகத்தில் இருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கியது.

தாக்குதல் சம்பவத்தில் 7 கணிப்பொறிகள் சேதம் அடைந்தன. இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த வன்முறை கும்பல், பத்திரிகை ஊழியர்களை மிரட்டியதாக தெரிகிறது.

தகவல் அறிந்து போலீஸ் வருவதற்குள் வன்முறை கும்பல் தப்பி விட்டது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:34 )  


More and More


கிட்டதட்ட

08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
23 January 2012, 18.09 செய்திகள்
சிறந்த தமிழ் நூல்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி : தமிழக அரசு
சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப் படும்...மேலும்...
0 Comments , 131 Hits
19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 5 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits