புதுதில்லி: தற்போதைக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இருக்காது என தெரிகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை அதற்கு ஏற்றாற்போல அதிகரிப்பது அவசியம். ஆனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும், பெட்ரோல், டீசல் விலையை பெரிய அளவில் உயர்த்த மத்திய அரசு தயங்கி வருகிறது.
இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பற்றி விவாதிக்க ஜூன் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. எரிவாயு பொருட்கள் விலை அதிகரிக்கக் கூடும் என பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று (ஜூன் 22) சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற மத்திய அரசு தயங்கி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விலை ஏற்றம் செய்ய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app





