புனாவான்: பிலிப்பைன்ஸ் நாட்டின் புனாவான் நகரத்து மேயர் எட்வின் எலோர்ட், தன் செல்ல முதலையை பிரிய மனமில்லாமல் தவித்து வருகிறார்.
புனாவான் நகரத்தில் கடந்த மாதம் 21 அடி முதலை ஒன்று வனத்துறையினரால் பிடிக்கப் பட்டது. இது தற்போது புனாவான் நகரிலேயே பராமரிக்கப் பட்டு வருகிறது.
லலாங் என்ற பெயர் கொண்ட இந்த முதலையை, கீசோன் நகரிலுள்ள நினோய் நீரியல் பூங்காவுக்கு மாற்ற சுற்றுச்சூழல் செயலர் ராமோன் பாஜே, நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், அதற்கு புனாவான் மேயர் எட்வின் எலோர்ட் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
லலாங்குடன் மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் அதனை விட்டு பிரிய மனமில்லை என்றும் அதனை தன் மகன் போல் தான் நினைத்திருப்பதாகவும் மேயர் எட்வின் கூறியதாக உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
அந்த முதலைக்காக 20 ஹெக்டேர் நிலப்பரப்பில் மாநகராட்சி சார்பில் முதலை பூங்கா அமைக்கவும் எட்வின் நடவடிக்கை எடுத்து வருகிறாராம்.
மேயரின் இந்த முதலை பாசம், வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app


