இந்தோர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பாக். பங்கேற்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த ஷாருக் கானின் படத்தை புறக்கணிக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பாக். வீரர்களை யாரும் விலைக்கு வாங்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக் கான் பாக். வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிவசேனாவைத் தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் கட்சியும் ஷாருக் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சர்வதேச பொது செயலாளர் பிரவீண் தொக்காடியா கருத்து தெரிவித்துள்ளதாவது:
“மும்பை தாக்குதலில் பாக்கிஸ்தானின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. அப்படி பட்ட பாக்கிஸ்தானுக்கு நேரிடியாக ஆதரவு தெரிவித்திருக்கும் ஷாருக் கானின் படத்தை (மை நேம் இஸ் கான்) புறக்கணிக்க வேண்டும். ஆனால், போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும்.
பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகம். பாக். வீரர்களை நாட்டுக்குள் அனுமதித்தால், தீவிரவாதிகளின் வருகை மேலும் அதிகரித்து விடும்.
சினிமா நட்சத்திரங்கள் அரசியல் பற்றி பேசுவதற்கு முன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.”
இவ்வாறு பிரவீண் தொக்காடியா கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




