டார்ஜிலிங்: அகில இந்திய கூர்க்கா கூட்டமைப்பின் தலைவர் மதன் தமாங்கின் கொலை வழக்கில் முதன்மையாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள நிகோல் தமாங் இன்று காலை (ஆக.22) சிஐடி காவலில் இருந்து தப்பி ஓடி விட்டான்.
டார்ஜிலிங்கில் கட்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்த போது, கடந்த மே 21ம் தேதி அகில இந்திய கூர்க்கா கூட்டமைப்பின் தலைவர் மதன் தமாங் சில சமூக விரோதிகளால் வெட்டிக் கொல்லப் பட்டார்.
இந்த வழக்கில் முதன்மையாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள நிகோல் தமாங் கடந்த 16ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப் பட்டான். அதனைத் தொடர்ந்து, ஆக.17ம் தேதி டார்ஜிலிங் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட நிகோல் தமாங், டார்ஜிலிங்கில் சிஐடி காவலில் வைக்கப் பட்டிருந்தான்.
இந்நிலையில், இன்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு, சிஐடி காவலில் இருந்து நிகோல் தமாங் தப்பிவிட்டதாக, டார்ஜிலிங் காவல் துறை எஸ்.பி. தேபேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய நிகோல் தமாங்கை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
Want to write for Maniyosai?
Download our android app




