maniyosai.com

You are here: Home செய்திகள் சேவாக்கிடம் மன்னிப்பு கேட்டார் ரந்தீவ்

சேவாக்கிடம் மன்னிப்பு கேட்டார் ரந்தீவ்

E-mail Print
Share/Save/Bookmark

virender sehwagகொழும்பு: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் நேற்று (16/08/2010) இந்தியா வெற்றிப்பெற்றிருந்தாலும் வீரேந்திர சேவாக்கை சதம் அடிக்காமல் தடுக்கும் விதமாக நோ பால் வீசிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சூரஜ் ரந்தீவ் இன்று (17/08/2010) சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று (16/08/2010) இலங்கை தம்பூலா என்னும் இடத்தில் இந்தியா இலங்கை போட்டி நடைப்பெற்றது. அப்பொழுது வீரேந்திர சேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை அணி வீரர் ரந்தீவ் வீசிய நோ பாலால் சேவாக் சதம் அடிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இந்தியா வெற்றிப் பெற்றது.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக் ரந்தீவ்  தான் சதம் அடிக்கக் கூடாது என்ற காரணத்தினால் வேண்டுமென்றே நோபால் போட்டதாக குற்றம் சாட்டினார். இதுப் போல ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கருக்கும் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று (17/08/2010) சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ரந்தீவ் என் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்’ என பதிந்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 189 Hits
02 April 2012, 22.47 வணிக செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிப்பரப்ப ஸ்டார் நிறுவனத்துக்கு உரிமம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விளையாடி இந்தியாவில் நடக்கும் அனைத்து...மேலும்...
0 Comments , 51 Hits
15 May 2012, 20.56 செய்திகள்
சூதாட்ட புகார் : 5 கிரிக்கெட் வீரர்கள் பணிநீக்கம்
மும்பை: கிரிக்கெட் சூதாட்டத்தில் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ள 5...மேலும்...
0 Comments , 16 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits