நஹன் (ஹி.பி.): நடிகர் ஷாருக் கான் பாக்கிஸ்தான் அனுதாபி என்றும், அவரை எதிர்த்து சிவசேனா போராடுவது நியாயம்தான் என்றும் விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விஹெச்பி சர்வதேச தலைவர் பிரவீண் தொகாடியா கூறியதாவது:
“சிவசேனா கட்சியினர் ‘மை நேம் இஸ் கான்' படத்தை எதிர்ப்பதில் தவறு இல்லை. எவ்வளவு நாட்களுக்குதான் ஒரு பாக்கிஸ்தான் அனுதாபியை சகித்துக் கொள்ள முடியும். பாக்கிஸ்தானை ஆதரிப்பது மூலம், தன்னை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆக்கிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்
ஷாருக்கான்.
மும்பைக்கு ஒரு குறிப்பிட்டக் கட்சியினர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு. மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம்.”
இவ்வாறு பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



