புதுதில்லி: தேசியவாத காங்கிரச் தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார், சிவசேனா தலைவர் பால் தாக்ரேவை சந்தித்துள்ளது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை மராத்தியர்களுக்கே விவகாரத்திலும், ஐபிஎல் விவகாரத்திலும் சிவசேனா கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
அதே போல்,விவசாயத் துறை அமைச்சராக மத்திய காங். கூட்டணியில் இருக்கும் சரத் பவார் மீது ஆளும் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளதாக கூறப் படுகிறது.
அண்மையில், விலைவாசி உயர்வுக்கு பிரதமரும் காரணம் என சரத் பவார் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்ரேவை, தேசியவாத காங். தலைவர் சரத் பவார், நேற்று (பிப்.7) திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:
“சரத் பவார், அமைச்சராகவோ, தேசியவாத காங். தலைவராகவோ, தாக்ரேவை சந்திக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்ற முறையில் சந்தித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசியிருக்கலாம். இதனால், அரசியலில் மாற்றம் நிகழ சாத்தியம் இல்லை.”
ராகுல் - தாக்ரே சண்டையின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதே என நிருபர்கள் கேட்டதற்கு, “இதை அந்த கோணத்தில் பார்க்க கூடாது.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




