புதுதில்லி: மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதங்கத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொண்டுள்ளார்.
இன்று (மார்ச் 10) மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் சில கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது.
அந்த இடைவேளையில், ஆளும் கூட்டணியினர் நாடாளுமன்ற வளாகத்தில், மகளிர் இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், ஆண்கள் சிறுபான்மையினர் ஆகி விட நேருமே, என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தன் ஆதங்கத்தை தெரிவித்தாராம்.
அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, “அப்படி ஒரு நிலை வந்தால், ஆண்களுக்கும் இடஒதுக்கீடு கொண்டு வருவோம்.” என நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம்.
Want to write for Maniyosai?
Download our android app



