புதுதில்லி: பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தனக்கென புதிய பதிவை தொடங்கியுள்ளது மத்திய புலனாய்வு துறை (சிபிஐ)
மக்களுக்கு மிகவும் அந்நியமாக விளங்கிவந்த சிபிஐ அண்மை காலங்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற வழக்குகள் மூலமாக மக்களுக்கு நெருக்கமான ஒரு துறை ஆகிவிட்டது. அது மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணூம் பொருட்டு சமூக வ்லைதளமான ஃபேஸ்புக்கில் புதிய பதிவை துவங்கியுள்ளது.
இதன் மூலம் மக்கள் உதவியுடன் வழக்குகளை விரைந்து முடிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கான உதவி பெறும் முறை முதல்கட்டமாக போபாலில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மக்களின் வரவேற்பை பொறுத்து பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் மூலம் தகவல் வழங்கும் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் முக்கிய வழக்குகள் பலவும் இதன் மூலம் தீர்வை எட்டும் எனவும் சி.பி.ஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
Want to write for Maniyosai?
Download our android app





