மும்பை : ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது.
சிட்னியில் நடந்த போட்டி தொடரின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் இந்திய வீரர் விராத் கோலி தன் நடு விரலை காண்பித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் நடு விரல் செய்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்த விராத் கோலி, தன் தாய் மற்றும் சகோதரி குறித்து ரசிகர்கள் ஆபாசமாக பேசியதாலேயே அவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கிரிக்கெட் ரசிகர்களும், மாற்று அணி வீரர்களும் பதிலளித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கிரிக்கெட் போட்டி தொடர்களின் போது வீரர்களின் கவனம் முழுவதும் ஆட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்பதாலும், சமூக வலைதளங்களில் எழுதுவது அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பி விடுகிறது என்பதாலும், இந்திய அணி வீரர்கள் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் ஆட்டம் குறித்த கருத்துக்கள் எதையும் எழுதக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




