சென்னை: விழுப்புரம் மாவட்டம் கோனூர் கிராமத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (பிப்.10) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் 8 வயது மகன் அருண்குமார், சசிகுமார் என்பவரின் 5 வயது மகன் அஸ்வீன்குமார் ஆகிய இருவரும் விளையாடி விட்டு, அருகிலுள்ள குடிநீர்க் குளத்தில் குளிக்கச் சென்ற பொழுது, தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
இது குறித்த தகவல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மூலம் அறிந்ததும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததுடன், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.மேலும் அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




