புதுதில்லி: திமுக, காங். ஆகிய கட்சிகளை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் தலைமை தேர்தல் ஆணையரை இன்று (பிப்.11) சந்தித்து, மார்ச் இறுதிக்குள் பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தனர்.
2 தினங்களுக்கு முன், தமிழக முதல்வர் எழுதிய கட்டுரையில், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல் படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.11) திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தது. பென்னாகரம் இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப் படாததற்கு, இக்குழு வியப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
தேர்தல் ஆணையரிடம் திமுக-காங். எம்.பி.க்கள் அளித்திருக்கும் மனுவில், “அதிமுக கூறியவுடன் தேர்தல் தேதியை தள்ளி வைத்தது ஏன்?” என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





