maniyosai.com

You are here: Home செய்திகள் கறுப்பு பணம்: விஜயகாந்த் விளக்கம்

கறுப்பு பணம்: விஜயகாந்த் விளக்கம்

E-mail Print
Share/Save/Bookmark

vijaykanthசென்னை: தன்னிடம் கறுப்புப் பணம் இருப்பதாக உளுத்துப் போன குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக ஆகிய இரு ஊழல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என விஜயகாந்த் அண்மையில் கூறியிருந்தார். திமுக, அதிமுகவை குறை கூறும் விஜயகாந்த்தே கறுப்பு பணம் வைத்திருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் அறிக்கைக்கு விஜயகாந்த் விடுத்துள்ள பதில் அறிக்கை:

கதாநாயனாக நடித்து நான் வாங்குகிற சம்பளத்தில் பெரும்பகுதியை வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்குவதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் இப்படி கூறுவது முதல் முறையல்ல. வேறு எந்தக் குற்றம், குறையும் காண முடியாததால் உளுத்துப்போன குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்பட வேண்டும். வருமானத்தை ஈட்டுவது முக்கியமல்ல. அதனை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். நான் செய்துள்ள உதவிகளை பட்டியலிட்டால் எந்தப் பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.

என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுமாறு முதல்வர் கூறியுள்ளார். என் முகத்தை நான் பார்ப்பது முக்கியமல்ல. நாட்டு மக்கள் பார்க்கிறார்களா என்பதே முக்கியம்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 25 August 2010 13:39 )  


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
10 April 2012, 18.22 செய்திகள்
கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
விருதுநகர்: கொலையாளியை தப்ப வைக்க சாட்சியங்களை மறைத்ததாகக் கூறி...மேலும்...
0 Comments , 41 Hits
14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 125 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits