ஆலய பிரவேசம் - ஏற்காடு சேர்வராயன் மலைக்கோயில்
தமிழகத்தில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று ஏற்காடு. ’ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு கிழக்கு தொடர்ச்சிமலையில் சேர்வராயன் மலைப்பகுதியில் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று ஏற்காடு. ’ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு கிழக்கு தொடர்ச்சிமலையில் சேர்வராயன் மலைப்பகுதியில் இருக்கிறது.
இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம். அவனுக்கு இது மனிதன், இது யானை, இது பூனை, என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இதை நன்கு உணர்ந்த இந்து மதத்தில் விலங்குகளுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. யானை என்றால் விநாயகர், அவரது வாகனம் சுண்டெலி. குரங்கு அனுமாரின் வடிவம், பாம்பென்றால் ஆதிசேஷன், முருகனின் வாகனம் மயில், விஷ்ணுவுக்கு வாகனம் கருடன். காக்கையைக் கூட புறக்கணிக்கவில்லை. காகம் சனி பகவானின் அடையாளம். இப்படி ஒவ்வொரு உயிர்களையும் ஒரு கடவுளோடு சம்பந்தப்படுத்தி எல்லா உயிர்களையும் மதிக்கக் கற்றுத் தருகிறது இந்து மதம்.
ஆன்மீக எண்ணங்களுக்கும், பக்தி பரவசத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரும் இடம் நம் தமிழ்நாடு. இங்கே பல சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், முருகன் கோயில்கள், அம்மன் கோயில்கள் என பலவாரியானக் கோயில்கள் இருக்கிறது.
Last Updated on Saturday, 12 June 2010 14:35
இன்றும் பல கோயில்களில் பிற மதத்தவர்கள் உள்ளே நுழையக்கூடாது, சில ஜாதியினருக்கு அனுமதியில்லை என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கின்றன. இதைப் பார்த்தே சிலர் நாத்திகம் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இதுப்போன்ற தீண்டாமைகளை ஏற்படுத்தியது யார்? கடவுளா? கோடானுக்கோடி உயிர்களையும் படைத்திட்ட இறைவனுக்கு எல்லாரும் ஒன்றுதான். அவனது சபையிலே ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று எந்த பேதமும் இல்லை என்பதை கடவுளே நேரடியாக விளக்கிய இடம் உடுப்பி.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே’ என்பது பழமொழி. நாம் இப்போது தரிசிக்கப் போகும் ஊரோ கோயிலால் பாதியும், குளத்தால் மீதியும் நிறைந்தது......
“கோயில் பாதி; குளம் பாதி”............ என்ற பழமொழிக்கு சொந்தமான மன்னார்குடிதான் இந்த வாரம் நாம் தரிசிக்க போகும் கோயிலும், குளமும்.
’கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ ’இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்?’... இதுப்போல பல பகுத்தறிவு கேள்விகளை நாம் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம், நம்பிக்கைதான் கடவுள், இயற்கைதான் கடவுள் என்ற பல்வேறு பதில்களும் நம் காதில் விழுந்துக் கொண்டுதான் இருக்கிறது.
Last Updated on Wednesday, 06 January 2010 10:25
தமிழ் நாட்டிற்கென ஒரு மொழி, ஒரு தலைநகர், ஒரு அரசு என்று நமக்கே நமக்காக உள்ள ஒரு சில விஷயங்களைப் போல நம் தமிழகத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் முருகப் பெருமான். சமஸ்கிருதமோ அல்லது மற்ற வடமொழிகளோ பேசாமல் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மொழியிலேயேப் பேசியக் கடவுள் முருகன். அதனால் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் தமிழர்கள் அதிகம் கொண்டாடுவதும் வள்ளி மணாளனையே.
“மாதா, பிதா, குரு, தெய்வம்.” என்கிறோம். இதில் நம் அறிவு கண்களை திற்ந்து வைக்கும் குருவை தெய்வத்திற்கும் மேலாக வணங்குகிறோம்.
இங்கே நாம் குரு என்று குறிப்பிடுவது நமது பள்ளிக் கூட ஆசிரியர்களை மட்டுமல்ல; நம்மில் ஒருவராக பிறந்து உலக ஆசைகளைத் துறந்து துறவறம் பூண்டு மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை நல்வழிப்படுத்திய மகான்களையும் இந்த ‘குரு’ என்ற சொல் குறிக்கிறது.ஆம். நம் நாட்டில் கோயில்களுக்கு இணையாக நிறைய மடங்களும் இருக்கின்றன.அங்கே தினமும் பிரார்த்தனைகளும் நடந்து வருகின்றன.அவற்றில் இன்று நாம் பார்க்கப் போவது 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார்.
திரும்பியப் பக்கமெல்லாம் ஆறுகள், ஓடைகள் என தண்ணீரும், தென்னை மரங்களும் செழுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனதிற்கு இதமளிக்கின்றன. இவ்வளவு வளங்களுடன் செழிப்பாக இருக்கும் கேரள மாநிலத்தை, கடவுளின் சொந்த நாடு என்றுக் கூறிக்கொள்வதில் அளவிலாத பெருமை அவர்களுக்கு. அது உண்மையிலேயே கடவுளின் நாடோ, இல்லையோ, ஆனால் மகாவிஷ்ணுவே வழிப்பட்ட சிலையை நாமும் வணங்க வேண்டுமென்றால் குளுகுளு கேரளாவிற்குதான் செல்லவேண்டும்.
Last Updated on Saturday, 12 June 2010 14:36Page 1 of 2
| குழந்தைகள் பயப்படும் இடமாக பள்ளியை மாற்ற வேண்டாம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுரை 04/09/2010 புதுதில்லி: குழந்தைகள் பயப் படும் இடமாக பள்ளிக்கூட [ ... ] |
| மற்ற செய்திகள் |